Events

ஸ்ரீவில்லிபுத்தூர் தென் திருப்பதி திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் – புரட்டாசி நான்காம் சனிக்கிழமை சிறப்பு அன்னதானம்

ஸ்ரீவில்லிபுத்தூர் தென் திருப்பதி திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் – புரட்டாசி நான்காம் சனிக்கிழமை சிறப்பு அன்னதானம்

ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அடிவாரத்தில் புரட்டாசி விசேஷ நாளான சனிக்கிழமை தோறும் நமது டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற அன்னதானத்தில் …. முதல் சனிக்கிழமை 6000 பக்தர்களுக்கும், இரண்டாம் சனிக்கிழமை 9000 பக்தர்களுக்கும், மூன்றாம் சனிக்கிழமை 15000 பக்தர்களுக்கும் கடைசிவார 4 ஆம் சனிக்கிழமை 7000 பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கி பக்தர்களின் பசியாற்றி இறைவனின் ஆசி பெற்றோம். எம்பெருமான் திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள், லட்சுமி தாயாரின் ஆசியும் அருளும் எல்லா வளமும் கிடைக்க பெற […]

ஸ்ரீவில்லிபுத்தூர் தென் திருப்பதி திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் – புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை சிறப்பு அன்னதானம்

ஸ்ரீவில்லிபுத்தூர் தென் திருப்பதி திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் – புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை சிறப்பு அன்னதானம்

04-10-2025 சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு 15000 பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. நமது ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் மற்றும் நமது நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பக்தர்களுக்கு தங்கள் கரங்களால் அன்னம் வழங்கி பெருமானின் ஆசி பெற்றார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தென் திருப்பதி திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் – புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை சிறப்பு அன்னதானம்

ஸ்ரீவில்லிபுத்தூர் தென் திருப்பதி திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் – புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை சிறப்பு அன்னதானம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அடிவாரத்தில் இராஜபாளையம் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக 27-09-2025 அன்று புரட்டாசி 2 ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது. 9000 பக்தர்கள் வரை வருகை தந்து அன்னம் பெற்று சிறப்பித்தார்கள்.

👁இலவச கண் சிகிச்சை முகாம்👁

👁இலவச கண் சிகிச்சை முகாம்👁

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா ரெங்கநாதபுரம், திருமலாபுரம் சந்தனமாரியம்மன் கோவில் யாதவ சமுதாய கூடத்தில் வைத்து 27-09_2025 சனிக்கிழமை அன்று இராஜபாளையம் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாமில் 200 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டார்கள். 15 நபர்கள் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தென் திருப்பதி திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் – புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு அன்னதானம்

ஸ்ரீவில்லிபுத்தூர் தென் திருப்பதி திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் – புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு அன்னதானம்

ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் தென் திருப்பதி திருவண்ணாமலை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அடிவாரத்தில் வைத்து புரட்டாசி முதல் சனிக்கிழமை (20-09-2025) சிறப்பு அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கபட்டது. நமது டிரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சேவையாற்றினார்கள். நிர்வாகத்தின் சார்பாக அன்னதானத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டது.

79 வது சுதந்திர தின விழா

79 வது சுதந்திர தின விழா

79 வது சுதந்திர தினம் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக இராணுவ வீரர் S.சந்தனகுமார் கலந்து கொண்டு கொடி ஏற்றி சிறப்பித்தார்கள். மேலும் நமது நிர்வாகிகள் கலந்து கொண்டு சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

🌱மரக்கன்று நடும் விழா🌱

🌱மரக்கன்று நடும் விழா🌱

ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக 10-08-2025 ஞாயிறு அன்று இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் முன்பு உள்ள பகுதிகளில் மரக்கன்று புங்கை மரம், வாகை மரம், வேம்பு மரம், புளிய மரம், பூவரச மரம் நடப்பட்டது. அதை சுற்றி உள்ள கண்மாய் கரை ஓரங்களில் 50 க்கும் மேற்பட்ட பனைமர விதை நடப்பட்டது. ஆத்யம் டிரஸ்ட் நிர்வாகிகள் மரக்கன்று நடும் விழா ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர். மேலும் பொதுமக்களும் தன்னார்வலர்களாக கலந்து கொண்டு சேவை செயல்பாட்டினை சிறப்பாக்கினர்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடித் தேரோட்டம் – சிறப்பு அன்னதானம்

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடித் தேரோட்டம் – சிறப்பு அன்னதானம்

ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக 28-07-2025 திங்கள்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் தேரோட்டம் திருநாளில் மாபெரும் அன்னதானம் சிறப்பாக வழங்கபட்டது. அதிகாலை 7 மணி முதல் 6 வகை சாதம் – கேசரி, வெண்பொங்கல், சாம்பார் சாதம், லெமன் சாதம், புளியோதரை, தயிர் சாதம் தொடர்ச்சியாக மதியம் வரை வழங்கபட்டது. 4000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உணவு அருந்தி பங்கேற்றார்கள். மேலும் அன்னதான விழா ஏற்பாடுகளை ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் […]

Free Eye Treatment Camp 2025 @ Srivilliputtur

Free Eye Treatment Camp 2025 @ Srivilliputtur

It was Conducted on 29-06-2025 by Adhyam Charitable trust and Aravind Eye Hospital. In our Eye Treatment Camp, Charitable Trust Administrators and general Public was participated and Received Better Treatment in Thiyagaraja Primary School at Srivilliputtur. இலவச கண் சிகிச்சை முகாம்29.6.2025 ஞாயிறு அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் தியாகராஜா தொடக்க பள்ளியில் வைத்து பொது மக்கள் அனைவருக்கும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ […]

Free Eye Treatment Camp 2025 @ Rajapalayam

Free Eye Treatment Camp 2025 @ Rajapalayam

It was Conducted on 01-06-2025 by Adhyam Charitable trust and Aravind Eye Hospital. In our Eye Treatment Camp, Charitable Trust Administrators and general Public was participated and Received Better Treatment at INTUC mahal in INTUC Nagar, Rajapalayam.

2025 ஆம் ஆண்டின் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் அன்னதானம் வழங்கல்

2025 ஆம் ஆண்டின் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் அன்னதானம் வழங்கல்

2025 ஆம் ஆண்டின் தமிழ் புத்தாண்டு சித்திரை 1 ஆம் தேதி அன்று “ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட்” அலுவலகத்திற்கு ஆத்யம் டிரஸ்ட் நிறுவனர் S.V.ராஜேந்திரன் சார் அவர்கள் வருகை தந்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடினார்கள். இந்த புத்தாண்டு வெற்றி ஆண்டாக அமையும் என வாழ்த்தி அனைவருக்கும் அன்னதானம் மற்றும் சிறு அன்பளிப்பு வழங்கினார்கள்.

2019 ஆம் ஆண்டு மகா ஆரத்தி விழா நடைபெற்றது

2019 ஆம் ஆண்டு மகா ஆரத்தி விழா நடைபெற்றது

2019 ஆம் ஆண்டு முதல் பாபநாசம் தாமிரபரணி நதிக்கரையில் ஆத்யம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மகா ஆரத்தி விழா பிரதி மாதம் விசாகம் நட்சத்திரம் அன்று தொடர்ச்சியாக நடைபெற்றது. நமது நிர்வாகிகள் ஆரத்தி எடுக்கும் காட்சி வீடியோ இது.

ஹரித்துவார் ஸ்ரீ கருடானந்தா சுவாமிகள் அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டில் பிறந்தநாள் விழா

ஹரித்துவார் ஸ்ரீ கருடானந்தா சுவாமிகள் அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டில் பிறந்தநாள் விழா

ஹரித்துவார் ஸ்ரீ கருடானந்தா சுவாமிகள் அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பழனி மெய்த்தவ அடிகள் பொற்சபையில் வைத்து கொண்டாடப்பட்டது. அதில் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டு சுவாமிகளுக்கு பரிசளிப்பு நடைபெற்றது.

2018 ஆம் ஆண்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு பாபநாசம் தாமிரபரணி நதியில் மகா புஷ்கரணி விழா நடைபெற்றது அன்று ஆத்யம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம்

2016 ஆம் ஆண்டு இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம்

2016 ஆம் ஆண்டு ஆத்யம் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து ராஜபாளையம் சத்திரப்பட்டியில் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

2016 ஆம் ஆண்டு ஆன்மீகப் பணி மற்றும் சமுதாய பணிகளுக்கு கலந்தாய்வு

2016 ஆம் ஆண்டு ஆன்மீகப் பணி மற்றும் சமுதாய பணிகளுக்கு கலந்தாய்வு

2016 ஆம் ஆண்டு கார்த்தியும் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் உயர்திரு S.V.ராஜேந்திரன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியவர்களுடன் ஹரித்துவார் ஸ்ரீ மங்கள காளி மடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ கைலாஷ் ஆனந்த் சுவாமிகள் அவர்களுடன் ஆன்மீகப் பணி மற்றும் சமுதாய பணிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது

2016 ஆம் ஆண்டு ஆன்மீகப் பணி மற்றும் சமுதாயப் பணிகளுக்கு கலந்தாய்வு

2016 ஆம் ஆண்டு ஆன்மீகப் பணி மற்றும் சமுதாயப் பணிகளுக்கு கலந்தாய்வு

2016 ஆம் ஆண்டு ஹரித்துவார் ஸ்ரீ கருடானந்தா சுவாமிகள் மற்றும் விவேகானந்தா பிரம்மச்சாரி சுவாமிகள் அவர்களுடன் ஆத்யம் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவனர் S.V.ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகளுடன் ஆன்மீகப் பணி மற்றும் சமுதாயப் பணிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது.